» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கடலில் படகு இரண்டாக உடைந்து விபத்து: மீனவர் தப்பினார் - மற்றொருவர் மாயம்!
திங்கள் 17, நவம்பர் 2025 4:25:54 PM (IST)
முட்டம் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது படகு இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் நீந்தி தப்பினார். மேலும் ஒருவர் கடலில் மாயமானார்.
கன்னியாகுமரி மாவட்டம் – குளச்சல் சட்டமன்ற தொகுதியில் உள்ள முட்டம் ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயரின் மகன் சுமன் ( 32 வயது) மற்றும் சத்தியான் மகன் ரகு ஆகிய இரு மீனவர்கள் கொல்லத்தில் மீன்பிடி தொழில் முடித்து முட்டம் நோக்கி கடற்கரை வழியாக வந்தபோது திடீர் அலைக்காற்றில் வள்ளம் இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியது.
இதில் ரகு நீந்தி நீரோடி பகுதியில் கரை சேர்ந்தார். ஆனால் சுமன் இதுவரை கரை திரும்பவில்லை. அவரை மீட்பதற்கு கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், கடலோர காவல்துறை, மீன்வளத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட சஹகார் பாரதி தலைவரும் முன்னாள் கூட்டுறவு இணைய தலைவருமான இ.எஸ். சகாயம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரிக்கு தினசரி இரயில்கள் கிடைக்குமா? – பயணிகள் எதிர்பார்ப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:10:46 PM (IST)

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)

மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 18, பிப்ரவரி 2026 8:41:13 AM (IST)

