» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பரோடா கிசான் பக்வாடா நிகழ்ச்சியில் ரூ.1 கோடி கடனுதவி : ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
வெள்ளி 14, நவம்பர் 2025 10:24:39 AM (IST)

பரோடா கிசான் பக்வாடா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரூ.1 கோடி மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்டம் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், உள்ளூர் விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் நலனுக்காக பேங்க் ஆப் பரோடா வங்கி மூலம் "பரோடா கிசான் பக்வாடா" விழிப்புணர்வு நிகழ்ச்சி இரையுமன்துறையில் உள்ள செயிண்ட் பார்பரா சமூக நலக்கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்துகொண்டு, பேசுகையில்பொருளாதார வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு முக்கியமானது. பொதுத்துறை வங்கியினை அணுகி குறைந்த வட்டியில் மீனவர்கள் கடன் பெற வேண்டும். மேலும் விவசாய கடன் அட்டை (KISAN CREDIT CARD) மூலமாக கடனுதவி திட்டங்களில் இணைந்து பயனடைய வேண்டும். தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு கடன் மூலம் வாழ்வாதாரத்தினை உயர்த்திடலாம்.
மேலும், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்கள் மூலம் மீன்பிடி முறையினை ஊக்குவித்திட தேவையான நிதியினை கடனுதவியாக பெறுதல், மீனவர்களுக்கு அரசங்கத்தால் வழங்கப்படும் நிதி உதவி திட்டங்கள், சேமிப்பு பற்றிய அவசியங்கள் குறித்தும், மானியம் வழங்க கூடிய வங்கி கடன் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 15 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் கடன்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பேசினார்கள்.
நிகழ்ச்சியில் பேங்க் ஆப் பரோடா மதுரை மண்டல முதன்மை மேலாளர் பிரகாஷ், கன்னியாகுமரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் கொ.து.கோபிநாத், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.செல்வராஜ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ஜெ.வை.அஜித் ஸ்டாலின், தேங்காப்பட்டணம் பேங்க் ஆப் பரோடா வங்கி கிளை மேலாளர் சி.ரூத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்: ஆட்சியர் அறிவிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:52:13 PM (IST)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் புதிய பெட்டிகளுடன் முதல் பயணத்தை துவங்கியது
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:03:13 PM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் 1025 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான ஆணை
சனி 13, டிசம்பர் 2025 10:33:38 AM (IST)


.gif)