» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
திங்கள் 20, அக்டோபர் 2025 9:46:32 AM (IST)
இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும் என்று இவ்வாறு இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.

52 டன் எடை கொண்ட இந்திய விண்வெளி மையம் 5 ராக்கெட் மூலம் விண்ணுக்கு கொண்டு சென்று நிறுவப்பட உள்ளது. இதற்கான முதல் ராக்கெட் வருகிற 2028-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும். பின்னர் 4 ராக்கெட் மூலம் விண்வெளி மையம் எடுத்து செல்லப்பட்டு 2035-ம் ஆண்டு நிறுவப்படும். இதற்கான சோதனை இந்த ஆண்டு வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது.
வருகிற டிசம்பர் மாதம் மார்க் 3 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் 6 ஆயிரம் கிலோ எடை கொண்ட தொலை தொடர்பு செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்படும். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக 3 ஆளில்லா ராக்கெட் அனுப்பி வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் முதல் ராக்கெட் அனுப்பி சோதனை செய்யப்படும். 2027-ம் ஆண்டு தொடக்கத்தில் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)

கொட்டாவி விட்டதால் திறந்த வாயை மூட முடியாமல் தவித்த வாலிபர்: ஓடும் ரயிலில் பரபரப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:29:36 AM (IST)

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரி உட்பட உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:32:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:25:13 AM (IST)

குடியிருப்பு பகுதிக்கு வந்த மலைப்பாம்பு : பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
வியாழன் 16, அக்டோபர் 2025 8:07:39 PM (IST)
