» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திற்பரப்பு அருவியில் குளித்தபோது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
ஞாயிறு 5, அக்டோபர் 2025 10:02:28 AM (IST)
திற்பரப்பு அருவியில் குளித்தபோது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பெரும்புழா பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்தார். அருவியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவி தண்ணீர் குறைவாக விழும் பகுதியில் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது அருகே குளித்துக் கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டார். இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் அந்த பகுதியில் நின்றவர்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து அருமனை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் அவர் கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த மாரிசெல்வம் (32) என்பதும், அங்கு ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து மாரிசெல்வம் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திற்பரப்பு அருவியில் குளிக்க 7 நாள்களுக்குப் பிறகு அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
ஞாயிறு 30, நவம்பர் 2025 10:34:28 AM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் முழுஉடல் பரிசோதனை முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 29, நவம்பர் 2025 5:02:37 PM (IST)

குமரி பகவதி அம்மன் கோவில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1.65 லட்சம் வருவாய்!
வெள்ளி 28, நவம்பர் 2025 10:42:22 AM (IST)

மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்: கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
வியாழன் 27, நவம்பர் 2025 3:46:38 PM (IST)

குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று : 700 விசைப்படகுகள் கரைதிரும்பின
புதன் 26, நவம்பர் 2025 3:35:40 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு இளஞ்சிறார்கள் உட்பட 5பேர் கைது: 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
புதன் 26, நவம்பர் 2025 11:08:54 AM (IST)


.gif)