» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திற்பரப்பு அருவியில் குளித்தபோது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
ஞாயிறு 5, அக்டோபர் 2025 10:02:28 AM (IST)
திற்பரப்பு அருவியில் குளித்தபோது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பெரும்புழா பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்தார். அருவியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவி தண்ணீர் குறைவாக விழும் பகுதியில் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது அருகே குளித்துக் கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டார். இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் அந்த பகுதியில் நின்றவர்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து அருமனை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் அவர் கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த மாரிசெல்வம் (32) என்பதும், அங்கு ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து மாரிசெல்வம் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம் : பொதுமக்கள் வியப்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 10:05:24 AM (IST)

ஒரே நாளில் 8 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது : குமரி மாவட்ட போலீஸ் அதிரடி!
புதன் 8, அக்டோபர் 2025 11:22:05 AM (IST)

திருடச் சென்ற வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபர் கைது!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 12:48:02 PM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: இலவசமாக மனுக்கள் எழுதிகொடுக்க ஏற்பாடு!
திங்கள் 6, அக்டோபர் 2025 3:32:00 PM (IST)

மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் பார்மசிஸ்ட் உயிரிழப்பு!
திங்கள் 6, அக்டோபர் 2025 12:36:30 PM (IST)
