» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தேரூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 3:19:09 PM (IST)

குமரி மாவட்ட வேளாண்மைத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தேரூர் நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில் - கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண்மை துறையின் கீழ் கிருஷ்ணன்கோவில், பறக்கை, புத்தளம், தேரூர், செண்பகராமன்புதூர், தாழக்குடி, திட்டுவிளை, சிறமடம், கடுக்கரை, திங்கள்நகர் ஆகிய 10 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று தேரூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தேரூர் மற்றும் அதை சார்ந்துள்ள பகுதிகளில் நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து தேரூர் நேரடி முதல் நிலையம் 01.09.2025 முதல் தொடக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தற்போது அதிகப்படுத்தப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலையான சாதாரண ரகங்களுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500 மற்றும் சன்ன ரகங்களுக்கு ரூ.2545 என்று உயர்த்தப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் விலையில் அதிக லாபம் பெறுவதற்கு விவசாயிகள் தேரூர் நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்திட வேண்டும். அதற்கான உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மை இணை இயக்குனர், உதவி இயக்குனர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஆய்வில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொ) ஜென்கின் பிரபாகர், உதவி இயக்குனர் (அகஸ்தீஸ்வரம்) சுனில் தத், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் கலைமதி, துணை மண்டல மேலாளர்கள், வேளாண்மை துறை களப்பணியாளர்கள், நுகர்பொருள் வாணிபக் கழக களப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)

பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)

மாணவியை பலாத்காரம் செய்த டேக்வாண்டோ பயிற்சியாளர் தற்கொலை முயற்சி!
வெள்ளி 31, அக்டோபர் 2025 12:36:14 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம்
வியாழன் 30, அக்டோபர் 2025 5:32:00 PM (IST)

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் சிறையில் அடைப்பு!
புதன் 29, அக்டோபர் 2025 9:14:31 PM (IST)

நாகர்கோவிலில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
புதன் 29, அக்டோபர் 2025 4:56:43 PM (IST)


.gif)