» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்: ஆட்சியர் வழங்கினார்.
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:27:03 PM (IST)

பேச்சிப்பாறை மற்றும் சிற்றார் நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் பங்கு மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை மற்றும் சிற்றார் நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் பங்கு மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கி தெரிவிக்கையில் - தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க 2024-25 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானியக் கோரிக்கையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களால் உள்நாட்டு மீனவர்களுக்கு மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் 2024-25-ம் ஆண்டு மாநில நிதி திட்டத்தின் கீழ் உள்நாட்டு மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பரிசலுக்கு ரூ.9,250/- வீதம் பேச்சிப்பாறை நீர்தேக்கத்தில் 10 பங்கு மீனவர்களுக்கும், சிற்றார் நீர்தேக்கத்தில் 10 பங்கு மீனவர்களுக்கு என மொத்தம் ரூ.1.85 இலட்சம் மானியத்தில் 20 பயனாளிகளுக்கு பரிசல்கள் வழங்கப்பட்டது. இதன்மூலம் பங்குமீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் துணை இயக்குநர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) சின்னக்குப்பன், உதவி இயக்குநர் விர்ஜில் கிராஸ்(நாகர்கோவில்), அஜித் ஸ்டாலின் (குளச்சல்) வட்டார வளர்ச்சி அலுவலர், பங்கு மீனவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)

பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)

மாணவியை பலாத்காரம் செய்த டேக்வாண்டோ பயிற்சியாளர் தற்கொலை முயற்சி!
வெள்ளி 31, அக்டோபர் 2025 12:36:14 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம்
வியாழன் 30, அக்டோபர் 2025 5:32:00 PM (IST)

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் சிறையில் அடைப்பு!
புதன் 29, அக்டோபர் 2025 9:14:31 PM (IST)

நாகர்கோவிலில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
புதன் 29, அக்டோபர் 2025 4:56:43 PM (IST)


.gif)