» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் சிறையில் அடைப்பு!
புதன் 29, அக்டோபர் 2025 9:14:31 PM (IST)
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் இன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பு பிரகாஷ் இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பதிவு செய்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருந்து வருகிறது இந்த நிலையில் ஒருவரிடம் லஞ்ச பணம் பெறும்போது கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
இன்று மாலை அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து டிஸ் சார்ஜ் செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்ரித் பாரத் ரயில்களில் மாற்றங்கள் வருமா? குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 3:33:39 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)

