» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் போக்குவரத்து சிக்னல் கம்பம் சரிந்து விழுந்தது: பெரும் விபத்து தவிர்ப்பு
திங்கள் 15, ஜூலை 2024 5:41:59 PM (IST)

தூத்துக்குடியில் பலத்த காற்றில் குரூஸ் பர்னாந்து பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து சிக்னல் கம்பம் சரிந்து விழுந்தது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குருஸ் பர்னாந்து சிலை அருகே போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து சிக்னல் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாநகரில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக போக்குவரத்து சிக்னல் கம்பம் திடீரென கீழே சரிந்து விழுந்தது.
இரும்பால் ஆன அதிக எடை கொண்ட இந்த போக்குவரத்து சிக்னல் கம்பம் கீழே சாயும் போது வாகன ஓட்டிகள் யாரும் குறுக்கே செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து கீழே விழுந்த போக்குவரத்து சிக்னல் கம்பத்தை சாலையில் இருந்து அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் அரசு சேவைகள்: ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி : எம்எல்ஏ தகவல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:43:29 PM (IST)

ஊருக்குள் நுழைந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:39:13 PM (IST)

அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 10:43:29 AM (IST)

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

யார் ?மே 16, 1721 - 12:30:00 PM | Posted IP 172.7*****