» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தக்கலையில் 8ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 6, ஜனவரி 2026 5:30:33 PM (IST)

தக்கலையில் வருகிற 8ஆம் தேதி நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (06.01.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
தமிழ்நாட்டை நோயில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தமிழ்நாடு முழுவதும் 02.08.2025 அன்று சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்கள்.
இம்முகாமில் சிறந்த மருத்துவர்களை வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தங்களது முழு உடலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அட்டை பெற்ற நபர்களுக்கு, இம்முகாமில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முகாமில் ஆண்கள், பெண்கள், கர்ப்பிணிகள் (மகப்பேறு) என மூன்றாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிட்சை, எலும்பு முறிவு மருத்துவம், பேறுகால மருத்துவம், குழந்தை நல மருத்துவம், இதயநல சிறப்பு மருத்துவம், நரம்பியல் சிறப்பு மருத்துவம், நுரையீரல் சிறப்பு மருத்துவம், நீரிழிவு நோய்கான சிறப்பு மருத்துவம், தோல் சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம், கண் சிறப்பு மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், இயற்கை மருத்துவம், உணவியல் ஆலோசணை உள்ளிட்ட ஆகிய 17 சிறப்பு மருத்துவ சிகிட்சை, சிறப்பு மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
அதனடிப்படையில் வரும் (வியாழக்கிழமை) 08.01.2026 பத்மநாபபுரம் நகராட்சி, இரணியல், விலவூர், திருவிதாங்கோடு ஆகிய பேரூராட்சி மற்றும் முத்தலக்குறிச்சி, சடையமங்கலம், நுள்ளிவிளை, கல்குறிச்சி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிக்கு அருகாமையில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் – முழு உடல் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்கள்.
ஆய்வில் மாவட்ட சுகாதார அலுவலர் அரவிந்த் ஜோதி, பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் கண்மணி, வட்டார மருத்துவ அலுவலர், முகாம் ஒருங்கிணைப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 5:05:18 PM (IST)

கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்லத் தடை: விபத்துக்கள் அதிகரிப்பால் ஆட்சியர் அதிரடி உத்தரவு!
சனி 11, ஏப்ரல் 2026 10:15:37 AM (IST)

தேர்தல் விதிமீறல்களை உடனுக்குடன் தெரிவிக்க உத்தரவு: நுண் பார்வையாளர்களுக்குத் பயிற்சி!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:13:27 PM (IST)

நள்ளிரவில் காய்கறி வியாபாரியின் ஆட்டோ எரிந்து சேதம் - போலீஸ் விசாரணை!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:25:27 AM (IST)

பைக் மீது கனிமவள லாரி மோதி விபத்து : தந்தை கண்முன்னே மகள் பலி!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:45:04 AM (IST)

நாகர்கோவிலில் ஏப். 15-ல் பிரதமர் மோடி ரோடு ஷோ: நயினார் நாகேந்திரன் தகவல்
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:32:57 PM (IST)

