» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கல்லூரி மாணவர்கள் நிரந்தர நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் : ஆட்சியரிடம் எஸ்எப்ஐ மனு!
திங்கள் 15, ஜூலை 2024 12:25:39 PM (IST)

தூத்துக்குடியில் கட்டண உயர்வைக் கண்டித்து போராடிய கல்லூரி மாணவர்களின் நிரந்தர நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்எப்ஐ கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய மாணவர் சங்க மாவட்ட குழு நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் கல்வி கட்டணத்தை உயர்த்தி உள்ளதைக் கண்டித்து போராட்டத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதில், 11 பேரை இடை நீக்கம் மற்றும் 3 பேரை நிரந்தர நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இதனை பயன்படுத்திக் கொண்டு ஏழை எளிய மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகங்கள் போட்டி போட்டுக் கொண்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால். ஏழை, எளிய மாணவர்களின் கல்வி கனவு என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நிரந்தரநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு ரிப்பீட் என்ற முறையை பயன்படுத்தி பழிவாங்க கூடிய சூழல் ஏற்படும். ஆகவே பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வருகை பதிவேடு பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும். அதுமட்டுமில்லாமல் மாணவர்கள் மீது கல்லூரிக்கு வருகை தராத மாணவர்களுக்கு கூட குற்றப்பத்திரிக்கை என்கிற பெயரில் பொய்யான செய்திகளை பெற்றோர்களிடம் சித்தரித்து வருகின்றனர்.
குற்றப்பத்திரிக்கை என்கிற பெயரில் மாணவர்களின் வீட்டிற்கு தபால் மூலமாக அனுப்பி அதற்கு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் இல்லை என்றால் சட்டப்படியான நடவடிக்கைக்கு உங்களது மகன்/ மகள் உள்ளாக்கப்படுவார்கள் என மாணவர்களின் பெற்றோரிடம் தபால் மூலமாக தெரிவிக்கின்றனர். ஆகவே காமராஜர் கல்லூரியில் நிரந்தர நீக்கம் செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

Padichu munnerra valiya parungaJul 15, 2024 - 02:08:12 PM | Posted IP 162.1*****