» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

உரிய அனுமதி பெற்ற பிறகே கட்டிட பணிகளை மேற்கொள்ள வேண்டும் : ஆட்சியர் அறிவிப்பு

செவ்வாய் 5, டிசம்பர் 2023 12:07:26 PM (IST)

இணையவழி கட்டிட வரைபட அனுமதி பெற்ற பின்னரே கட்டிட பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சித்துறை இயக்குநரின் கடிதத்தின் படி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகள் 2019 விதி 23 இன் படி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இணையவழி கட்டிட வரைபட அனுமதி  வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊராட்சிகள் கட்டிட விதிகள் 1997, பிரிவு 4 -ன்படி கட்டிட வரைபட அனுமதி வழங்கிட கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டிடம் அல்லது குடிசையை கட்ட அல்லது புனரமைக்க அல்லது மாற்ற அல்லது கட்டிடத்தை சேர்க்க விரும்பும் ஒவ்வொரு நபரும், தளத்தின் ஒப்புதலுக்காகவும் வேலை செய்வதற்கான அனுமதிக்காகவும் நிர்வாக அதிகாரியிடம், பிற்சேர்க்கை B-ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் ஒப்புதல் பெற வேண்டும், தேவைப்படக்கூடிய சூழ்நிலைகள் போன்ற மாறுபாடுகள் அதனுடன் இருக்க வேண்டும்

அ) பிற்சேர்க்கை C-ல் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளுக்கு இணங்க கட்டிடம் அல்லது குடிசையை புனரமைக்க அல்லது மாற்றியமைக்க அல்லது தேவையான அளவுக்கு சேர்க்க வேண்டிய நிலத்தின் தளத்திட்டம் (மூன்று)

ஆ) பிற்சேர்க்கை D-ல் குறிப்பிட்டுள்ள தேவைகளுக்கு இணங்க கட்டப்பட்ட புனரமைக்க அல்லது மாற்றியமைக்க அல்லது தேவைப்படக்கூடிய கட்டிடம் அல்லது குடிசையின் திட்டம் அல்லது திட்டங்கள்(மூன்று)

இ) பிற்சேர்க்கை  E ல் குறிப்பிட்டுள்ள தேவைகளுக்கு இணங்க தேவையான அளவு விவரக்குறிப்பு (மூன்றும்) மற்றும்

ஈ) கட்டிட அல்லது குடிசை எந்த நோக்கத்திற்காக அல்லது மாற்றியமைக்க அல்லது சேர்க்க முன்மொழியப்பட்டது என்பது பற்றிய தகவல்.

எனவே, தமிழ்நாடு ஊராட்சிகள் கட்டிட விதிகள் 1997-ல் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு உட்பட்டு கட்டிட வரைபட அனுமதி தொடர்பான விண்ணப்பத்தினை இணையவழியில் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து கிராம ஊராட்சி செயல் அலுவலரால் உரிய அனுமதியினைப் பெற்று அதன் பிறகே கட்டிட பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், 

கிராம ஊராட்சிகளில் இணையவழி கட்டிட வரைபட அனுமதி பெறாமல் எந்தவொரு கட்டிட பணிகளும் மேற்கொள்ளக் கூடாது எனவும்,  கிராம ஊராட்சிகளில் இணையவழி கட்டிட வரைபட அனுமதி பெறாமல் கட்டிட பணிகள் மேற்கொண்டால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory