» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சிஎஸ்கே-வின் ஹால் ஆஃப் பேம்: சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹெய்டன் கௌரவிப்பு!

திங்கள் 23, மார்ச் 2026 12:21:52 PM (IST)



சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள 'ஹால் ஆஃப் பேம்' கௌரவப் பட்டியலில், முன்னாள் நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் மேத்யூ ஹெய்டன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியது.

இந்த விழாவில் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பங்கேற்ற காட்சிப் போட்டிகள் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் வீரர்கள்: சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹெய்டன், டுவைன் பிராவோ, பார்த்திவ் படேல், ஹர்பஜன் சிங், எல். பாலாஜி, முரளி விஜய், பத்ரிநாத் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். மூத்த வீரர் எம்.எஸ். தோனி மற்றும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் முன்னாள் வீரர்களை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

சிஎஸ்கே அணி பலமுறை சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக இருந்த அதிரடி மன்னன் மேத்யூ ஹெய்டன் மற்றும் 'சின்னத் தல' சுரேஷ் ரெய்னா ஆகிய இருவருக்கும் 'ஹால் ஆஃப் பேம்' அங்கீகாரம் வழங்கப்பட்டது. சிஎஸ்கே வரலாற்றில் முதன்முறையாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த கௌரவப் பட்டியலில் இடம்பெறும் முதல் வீரர்கள் இவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory