» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐபிஎல்லில் மேட்ச் பிக்சிங்..? வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:35:40 PM (IST)
உலக அளவில் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் விளையாட்டாக ஐபிஎல் உள்ளது. இந்த தொடரை வைத்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெறுகிறது.
சூதாட்ட கும்பல் உடன் தொடர்புள்ள சில தொழில் அதிபர்கள் கிரிக்கெட் வீரர்களுடன் ரசிகர்கள் போன்று அறிமுகமாகி, அவர்களுக்கு பணம் அல்லது பரிசு வழங்கி நட்பு ஏற்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் போட்டி தொடர்பான சில தகவல்களை பெற்று சூதாட்டக்காரர்களுக்கு அதை வழங்கி விடுவார்கள். இதுபோன்ற நபர்களிடம் வீரர்கள், அணி உரிமையாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்டோர் சிக்கிவிடக் கூடாது என்பதில் பிசிசிஐ கவனமாக உள்ளது.
இதற்காக ஊழல் தடுப்பு பாதுகாப்பு குழுவை அமைத்துள்ளது. இந்த நிலையில் சூதாட்ட கும்பலுடன் தொடர்புடைய ஒரு தொழில் அதிபர், வீரர்களை அணுக முயற்சி செய்வதாக இந்த குழு எச்சரித்துள்ளது. ஏற்கனவே, மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லீட்ஸ் டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
புதன் 25, ஜூன் 2025 8:50:17 AM (IST)

இரு இன்னிங்சிலும் சதம்... ரிஷப் பண்ட் சாதனை!
செவ்வாய் 24, ஜூன் 2025 10:09:43 AM (IST)

யாரும் வேண்டுமென்றே கேட்சுகளை விடுவதில்லை : பும்ரா பெருந்தன்மை!!
திங்கள் 23, ஜூன் 2025 4:59:27 PM (IST)

டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம்: தோனியை முந்திய ரிஷப் பண்ட்
ஞாயிறு 22, ஜூன் 2025 11:44:26 AM (IST)

ஜெய்ஸ்வால் சதம், ஷுப்மன் கில் அரைசதம்: இந்தியா வலுவான தொடக்கம்!
சனி 21, ஜூன் 2025 8:49:38 AM (IST)

இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர்: ஆண்டர்சன் - தெண்டுல்கர் கோப்பை அறிமுகம்
வியாழன் 19, ஜூன் 2025 8:24:37 AM (IST)
