» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டவிரோத மது விற்பனை: வாலிபர் கைது; 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்!
வெள்ளி 1, மே 2026 7:37:00 PM (IST)
கோவில்பட்டி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஒருவரை இன்று கைது செய்தனர்.
கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மீகா மற்றும் போலீசார் இன்று கயத்தாறு மற்றும் அய்யனார் ஊத்து பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அய்யனார் ஊத்து பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், அவர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ராஜா (35) என்பது தெரியவந்தது. மேலும், அவர் அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 562 மது பாட்டில்கள், ரொக்கப் பணம் ரூ.1,600 மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாளை நீட் தேர்வு: மாணவர்களுக்கு என்.டி.ஏ வழங்கிய முக்கிய அறிவுரைகள்!
சனி 2, மே 2026 12:45:41 PM (IST)

சங்கரன்கோவிலில் புத்தகத் திருவிழா தொடக்கம்: 1 லட்சம் புத்தகங்கள் குவிப்பு - 10% தள்ளுபடி அறிவிப்பு!
சனி 2, மே 2026 12:12:30 PM (IST)

விஜய் வேளாங்கண்ணி வருகை திடீர் ரத்து : திருப்பலி தாமதம், தொண்டர்கள் ஏமாற்றம்!
சனி 2, மே 2026 11:58:31 AM (IST)

மே 11 முதல் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சனி 2, மே 2026 11:12:22 AM (IST)

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே வைரலாகும் பதிவு: விஜய்க்கு இளையராஜா மறைமுக வாழ்த்து?
சனி 2, மே 2026 10:52:37 AM (IST)

சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்: படகு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர் பலி!
சனி 2, மே 2026 10:25:53 AM (IST)


