» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 5:01:46 PM (IST)

திருநெல்வேலியில், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.சுகுமார் தலைமை தாங்கினார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம்: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, 18 வயது நிரம்பிய தகுதியான வாக்காளர்கள் எவரும் விடுபடக்கூடாது. அதே வேளையில், தகுதியற்ற நபர்களை பட்டியலில் சேர்க்கக் கூடாது.
இறுதிப் பட்டியல்: தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி 23 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இளம் வாக்காளர்கள்: மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் 18 வயது நிரம்பிய புதிய இளம் வாக்காளர்களைச் சேர்க்க வாக்காளர் பதிவு அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
அடிப்படை வசதிகள்: வாக்குப்பதிவு மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுத்தளம் ஆகிய அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பணி நெறிமுறைகள்: தேர்தல் ஆணையம் விதித்துள்ள வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி, தேர்தல் பணிகளில் எவ்விதத் தொய்வுமின்றி பணியாற்ற வேண்டும் என்றும், தேர்தல் விழிப்புணர்வுப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பங்கேற்ற அலுவலர்கள்: இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ்குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர்கள் மா.சுகன்யா (சிப்காட்), ஐயப்பன் (தேசிய நெடுஞ்சாலை), சந்திரசேகர் (நெடுஞ்சாலை), மகாலெட்சுமி (ஒழுங்கு நடவடிக்கை) ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) தவலேந்து, துணை ஆட்சியர் (பயிற்சி) கேரேனாப்புக் லிதியா, தேர்தல் வட்டாட்சியர் முருகன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம்: ரூ.80 லட்சத்தில் சுற்றுவேலி அமைக்கும் பணி தொடக்கம்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 8:05:06 PM (IST)

புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: தொண்டர்கள் உற்சாகம்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 5:45:53 PM (IST)

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்: தமிழகத்தில் 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!
திங்கள் 16, பிப்ரவரி 2026 4:09:32 PM (IST)

நடிகை த்ரிஷா குறித்த பேச்சுக்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன்: நயினார் நாகேந்திரன்
திங்கள் 16, பிப்ரவரி 2026 3:42:53 PM (IST)

தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் காலவரையற்ற மூடல்: ஊழியர்கள் முடிவு!
திங்கள் 16, பிப்ரவரி 2026 3:18:42 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி.மதன் பொறுப்பேற்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 12:57:08 PM (IST)

