» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மார்கழி மாதம் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும்.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்கழி மாதம் டிச. 16இல் தொடங்கி ஜன. 14இல் நிறைவடைகிறது. இம்மாதத்தில் திருச்செந்தூர் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 3.30-க்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4.45 - 5 மணிக்குள் உதயமார்த்தாண்ட தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 6 - 7 மணிக்குள் காலசந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 8.45 - 9 மணிக்குள் உச்சிகால தீபாராதனை நடைபெறும்
பிற்பகல் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 7 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 - 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று நடை திருக்காப்பிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு
ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜன. 1ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கும், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜன. 3ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கும் நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் நடைபெறும். பிரதோஷமான டிச. 17, ஜன. 1 ஆகிய 2 நாள்கள் பிற்பகல் 2.30 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 8:40:47 PM (IST)

கேரளத்தில் பாஜகவின் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்: நயினார் நாகேந்திரன்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:50:14 PM (IST)

நூறு நாள் வேலை திட்டத்தை சிதைக்க முயற்சி : மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:46:47 PM (IST)

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:14:54 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)

கேரம் வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி ஊக்கத்தொகை : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
திங்கள் 15, டிசம்பர் 2025 3:12:06 PM (IST)


.gif)