» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் நவ.17 முதல் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகும் - வானிலை ஆய்வு மையம்!
வியாழன் 13, நவம்பர் 2025 3:36:40 PM (IST)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நவம்பர் 17 முதல் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு வடகிழக்குப் பருவமழை காலமே அதிக மழைப்பொழிவை அளித்து வருகிறது.
கடந்த மாத இறுதி வரை வடகிழக்குப் பருவமழையின் முதல் இரண்டு சுற்று மழை பெய்துள்ளது. இரண்டு வாரங்களாக மழை குறைந்து காணப்படுகிறது. இடையிடையே வெப்ப சலனம் காரணமாக மழை பெய்தாலும் இந்த மாதத்திற்கான வடகிழக்குப் பருவமழை இன்னும் முழு வீச்சில் தொடங்கவில்லை.
இந்த நிலையில் தென்சீன கடல் பகுதியிலிருந்து கிழக்கு திசைக்காற்றும் வட இந்தியாவிலிருந்து வடக்கு திசை காற்று வடகிழக்கு காற்றாக மாறியுள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யும். நவம்பர் 17-க்குப் பிறகு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதற்கடுத்து வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக உள்ளது. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று வரும் நவம்பர் 17 முதல் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புகள் அதிகமுள்ளது. எனவே, டிசம்பர் மாத மத்திய பகுதியில் நல்ல மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
திங்கள் 17, நவம்பர் 2025 8:30:28 AM (IST)

தைப்பூச இருமுடி விழா: மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 57 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும்!
ஞாயிறு 16, நவம்பர் 2025 1:28:56 PM (IST)

கனமழை எச்சரிக்கை: நெல்லை-தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:41:16 AM (IST)

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் : பெண் சிக்கினார்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:39:41 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு: 2,632 பேர் எழுதினர்; 404 பேர் வரவில்லை!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:32:55 AM (IST)


.gif)