» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:06:50 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள குழந்தைககள் காப்பகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, கங்கைகொண்டான் சிப்காட் வளாகம் குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிப்காட் திட்ட இயக்குநர் மாரிமுத்து, குழந்தை காப்பகத்திற்கு பயில வரும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றார்கள்.
கங்கைகொண்டானில் இயங்கி வரும் "சிப்காட் தொழிற் பூங்காவில்” உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக சிப்காட் திட்ட அ.லுவலகத்தில் சுமார் 605 சதுர அடி பரப்பளவில் அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள "குழந்தைகள் காப்பகம்” கட்டப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகள் காப்பகத்தில் நல்ல பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியரால் குழந்தைகளுக்கு அன்பாகவும் பொறுமையாகவும் கல்வி கற்பித்தலோடு குழந்தைகளின் உடல் நலன் மற்றும் பாதுகாப்பிலும் அக்கறை செலுத்தும் நோக்கில் குழந்தைகளை நன்கு பராமரிக்கவும், கல்வியுடன், விளையாட்டுகள் கற்றுக்கொடுப்பதற்கும் சூழ்நிலை உள்ளது.
இந்நிகழ்ச்சியில், சிப்காட் அலுவலர் அழகுவேல்முருகன், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும், சிப்காட் நிறுவன பணியாளர்கள், குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிபிஐ விசாரணையில் நிரூபிக்கப்பட்ட பெரிய வழக்கு ஏதாவது இருக்கிறதா? சீமான் கேள்வி!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:45:48 PM (IST)

தவெகவை முடக்க திமுக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
திங்கள் 13, அக்டோபர் 2025 5:03:18 PM (IST)

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:50:26 PM (IST)

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:10:26 PM (IST)

தூத்துக்குடியில் அக்.16ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:32:44 PM (IST)

இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை : நெல்லையில் சோகம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:27:46 PM (IST)
