» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனிமொழி எம்.பி. வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சனி 4, அக்டோபர் 2025 11:21:45 AM (IST)

சென்னையில் கனிமொழி எம்.பி. வீடு உள்பட 7 இடங்களுக்கு  இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.

சென்னையில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு இ-மெயில் மூலமாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வாடிக்கையாகி இருக்கிறது. பல்வேறு பெயரிலான இ-மெயில் முகவரிகளில் இருந்து முக்கிய பிரமுகர்களின் இல்லங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டலை விடுத்துக் கொண்டே உள்ளார்.

அந்த வகையில் இ-மெயில் மூலமாக நேற்று இரவு சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி எம்.பி.யின் வீடு, மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீடு, முன்னாள் டி.ஜி.பி. நடராஜ் வீடு, ஆழ்வார்பேட்டை நாரதகான சபா, வேப்பேரி பெரியார் திடல், கிழக்கு கடற்கரை சாலை, இஸ்கான் கோவில் ஆகிய 6 இடங்களுக்கும் தொலைபேசி மூலமாக தேனாம்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து போலீசார் நேற்று இரவு மேற்கண்ட 7 இடங்களிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால் அது புரளி என்பது தெரியவந்தது. இ-மெயில் மூலமாக மிரட்டல் விடுத்த நபர் இதுவரை போலீசில் சிக்காத நிலையில், மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு போனில் மிரட்டல் விடுத்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஞானமூர்த்தி என்ற வாலிபரை கைது செய்தனர். அவர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபரை தொடர்ந்து தேடிவருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory