» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில ஹாக்கி போட்டி: அமைச்சர் பி.கீதா ஜீவன் வக்கி வைத்தார்
வெள்ளி 3, அக்டோபர் 2025 8:55:18 PM (IST)

கோவில்பட்டியில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் பி.கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.
விழாவில் அவர் தெரிவித்ததாவது : முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் வெற்றி பெற்று தேர்ந்தேடுக்கப்பட்ட வீர்ர்கள் தஞ்சாவூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறுகின்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்க சென்றுள்ளனர். அதுபோல நமது மாவட்டத்திற்கு 38 மாவட்டத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் வருகை இன்று தந்துள்ளனர்.
கோவில்பட்டி ஹாக்கி விளையாட்டில் சிறந்து விளங்குகின்ற பகுதியாகும். கோவில்பட்டியை ஹாக்கிபட்டி என்றும் அழைக்கப்படும் நகரமாகும். நமது பகுதியைச் சார்ந்த மாரீஸ்வரன் இந்திய அளவிலான குழுவில் இந்தியாவிற்காக விளையாடிக் கொண்டிருக்கின்றார். மேலும், இந்த மைதானமும் விளையாட்டு வீரர்களின் வசதிக்கேற்ப நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அகில இந்திய அளவிலான ஹாக்கி ஜீனியர் போட்டி இங்கு நடைபெற்றது.
அதற்கேற்ற வகையிலான மைதானம் இங்கு அமையப் பெற்றுள்ளது. எனவே, இங்கு வருகை தந்துள்ள அனைத்து வீரர்களையும் வருக என வரவேற்கிறோம். நல்ல முறையில் நீங்கள் பயிற்சி பெற்று வெற்றி பெற வேண்டும். வெற்றி வாய்ப்பு என்பது ஏதாவது ஒரு குழுவிற்கு தான் வரும். இருந்தாலும், இங்கு வருகைதந்துள்ள அனைத்து வீரர்களும் உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
பிற வீரர்களுடன் ஒப்புமைபடுத்தி வருகின்ற காலங்களிலும் நன்றாக பயிற்சி எடுத்து, இன்னும் அதிகமாக திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். உங்களை நீங்களே முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமை வகித்தார். கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷீ மங்கள், கோவில்பட்டி நகரமன்ற தலைவர் கருணாநிதி, மண்டல முதுநிலை மேலாளர் (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை) எம்.ராஜா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோனி அதிஷ்டராஜ், விளையாட்டு அலுவலர் (கோவில்பட்டி) ரத்தினராஜ், கோவில்பட்டி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகைதந்துள்ள விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நாளை நடைபெறும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:45:08 PM (IST)

முதல்வர் மு.க.ஸ்டாலின் 24-ம் தேதி தென்காசி வருகை: ஏற்பாடுகள் தீவிரம்!
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:20:59 PM (IST)

தூத்துக்குடியில் தரமற்ற முறையில் கழிவுநீர் கால்வாய் பணிகள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:31:20 AM (IST)

நெல்லையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:16:51 AM (IST)

காதல் மனைவியை நடுரோட்டில் குத்திக்கொன்ற கணவர் : நடத்தை சந்தேகத்தில் பயங்கரம்!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:13:44 AM (IST)

குரூப் 1 தேர்வர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:05:13 AM (IST)
