» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக அரசின் அலட்சியத்தால் தாமிரபரணி முற்றிலும் சீரழிந்துள்ளது: நயினார் நாகேந்திரன் அறிக்கை
புதன் 10, செப்டம்பர் 2025 3:50:08 PM (IST)
திமுக அரசின் அலட்சியத்தால் தாமிரபரணி ஆறு இன்று முற்றிலுமாக சீரழிந்து போயுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாருவது, அவற்றின் கரைகளைப் பலப்படுத்துவது, கால்வாய்களை மறுசீரமைப்பது, நீர்நிலைகளில் கலக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பது உள்ளிட்ட நீர் மேலாண்மையின் அடிப்படை வேலைகளைக் கூட செய்ய முடியாத திமுக அரசு, எதற்காக நீர்வளத்துறை என்ற தனித்துறையை உருவாக்கியது? அனைத்து உயிர்களின் வாழ்வாதாரமான நீராதாரத்தைத் திமுக அரசு எதற்கு இத்தனை அலட்சியமாகக் கையாள்கிறது என்பது தான் புரியாத புதிராக உள்ளது.
தென் தமிழக மக்களின் அடிப்படைத் தேவை இப்படி அந்தரத்தில் ஊசலாடுவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தக் கவலையுமில்லையா? ஒருவேளை, தண்ணீருக்காக தென் மாவட்ட மக்களைத் திக்குமுக்காட வைப்பதும் திராவிட மாடல் கொள்கைகளில் ஒன்றாக இருக்குமோ? திமுக ஆட்சியில் தெற்கு தேய்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மருத்துவமனையில் தந்தையை மகன் இழுத்துச் சென்ற சம்பவம்: ஊழியர்கள் சஸ்பெண்ட்!
புதன் 10, செப்டம்பர் 2025 5:19:32 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: ஆட்சியர் ஆய்வு
புதன் 10, செப்டம்பர் 2025 4:50:46 PM (IST)

அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அண்ணாமலை கண்டனம்!!
புதன் 10, செப்டம்பர் 2025 3:41:55 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் : தூத்துக்குடி வழங்கறிஞர் சங்கம் மறுப்பு
புதன் 10, செப்டம்பர் 2025 3:11:21 PM (IST)

போலி பத்திர பதிவுக்கு உதவியதாக சார் பதிவாளர் சஸ்பெண்ட்: பத்திரப்பதிவுத் துறை உத்தரவு
புதன் 10, செப்டம்பர் 2025 12:51:46 PM (IST)

விஜய் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல: திருமாவளவன் கருத்து
புதன் 10, செப்டம்பர் 2025 11:20:04 AM (IST)
