» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம்: மாநகராட்சி அனுமதி
சனி 4, பிப்ரவரி 2023 3:53:45 PM (IST)
சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. சென்னை மாநகராட்சியில் 'டோரன்ட் கியாஸ்' நிறுவனம் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
சென்னை மாநகராட்சியில் இதை செயல்படுத்த ஆலோசனைகள் மேற் கொள்ளப்பட்டு வந்தன. சென்னையில் உள்ள சாலைகள், சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றிடம் இருப்பதால் இந்த திட்டத்துக்கான நிலையான வழி காட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
எரிவாயு குழாய் புதை வடம், மற்ற நிறுவனங்களின் கேபிள்களுக்கும், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை கால்வாய் ஆகியவற்றுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கப்பட வேண்டும். கல்வெட்டுகள், பாலங்கள், போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட கூடாது என்பது உள்ளிட்ட வழி காட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் தார் சாலைகள் புதை வடத்தில் எரிவாயு குழாய் இணைப்பு அமைக்க 1 கி.மீ. தூரத்துக்கு ரூ.20 லட்சம் வைப்புத் தொகையும், கான்கிரீட் சாலைக்கு ரூ.21.75 லட்சம் வைப்புத்தொகையும் செலுத்த வேண்டும். சாலை வெட்டுப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள். சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்குவதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான பரிந்துரை மற்றும் வழிகாட்டுதல் குறித்து தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பி உள்ளது. இதை தமிழக அரசு பரிசீலித்து விரைவில் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளைஞர்கள் சாதி சமுதாய வேறுபாடின்றி பழக வேண்டும் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தல்!
வெள்ளி 16, மே 2025 8:27:34 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: மே 22-ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 16, மே 2025 8:23:31 AM (IST)

எந்த குரூப் படித்திருந்தாலும் பாலிடெக்னிக்கில் 2-ம் ஆண்டில் சேரலாம்: தமிழக அரசு
வியாழன் 15, மே 2025 8:10:39 PM (IST)

ஆளுநர் விவகாரம்: ஜனாதிபதியின் கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 15, மே 2025 3:54:18 PM (IST)

வாட்ஸ்அப் மூலம் கொலை மிரட்டல் : காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கவுதமி புகார்!
வியாழன் 15, மே 2025 11:51:21 AM (IST)

பொள்ளாச்சி பாலியல் வழக்கைப்போல் கோடநாடு வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும்: முதல்வர் பேட்டி
வியாழன் 15, மே 2025 8:40:39 AM (IST)
