» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வ.உ.சி துறைமுக கேண்டீன் தொழிலாளர்கள் 56 பேர் பணி நிரந்தரம்: சிஐடியு முயற்சி வெற்றி!

செவ்வாய் 7, ஜூலை 2026 5:30:43 PM (IST)

CituVocport.jpg

தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கேண்டீன் தொழிலாளர்கள் 56 பேர் பணி நிரந்தர அறிவிப்பைத் துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய உணவு விடுதி ஊழியர்கள் 56 பேரைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி 1998 முதல் நடைபெற்ற சட்டப் போராட்டத்தில், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவுப்படி பணி நிரந்தர அறிவிப்பைத் துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தற்போது பணியில் உள்ள 6 தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 56 தொழிலாளர்கள் 28.07.1998 முதல் முன் தேதியிட்டுப் பணி நிரந்தரம் செய்யப்படுகின்றனர். இவர்களுக்குத் துறைமுக ஊழியர்களுக்கான சம்பளம், பென்சன் உள்ளிட்ட ஓய்வூதிய உரிமைகள் மற்றும் அரியர்ஸ் நிதியுதவிகள் வழங்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1970-களில் தொடங்கப்பட்ட கேண்டீனில் பணிபுரிந்த ஊழியர்களுக்காகத் துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் மூலம் 1998-ல் வழக்குத் தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என 28 ஆண்டுகள் நடைபெற்ற நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நீதியரசர்கள் எம்.எஸ்.ரமேஷ், சக்திவேல் அமர்வு தனி நீதிபதியின் சாதகமான தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, துறைமுக ஆணைய போர்டில் சிஐடியு பிரதிநிதி எஸ்.பாலகிருஷ்ணன் கொடுத்த தொடர் அழுத்தத்தால், துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்தகுமார் புரோகித் தலைமையிலான நிர்வாகம் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றியைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் ஜனநாயக ஊழியர் சங்க அலுவலகத்தில் கூடி, சிஐடியு மாவட்டக் குழுவிற்கும், வழக்கறிஞர்களுக்கும் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் உணர்ச்சிப் பெருங்குடன் நன்றி தெரிவித்துக் கொண்டாடினர்.


மக்கள் கருத்து

P.manibharathiJul 8, 2026 - 03:17:37 PM | Posted IP 162.1*****

yes

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory