» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
முதல்வர் வருகை எதிரொலி: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; ட்ரோன்கள் பறக்க தடை!
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:20:11 PM (IST)

தமிழக முதல்வரின் வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய இரண்டு தேதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பயணத் திட்டம்:
தமிழக முதலமைச்சர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
24.02.2026: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா நினைவு வளைவு திறப்பு விழா.
24.02.2026: நாகர்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குமரி கோமேதகம் ஆர். பொன்னப்பா நாடர் அவர்களின் திருவுருச்சிலை திறப்பு விழா.
25.02.2026: நாகர்கோவில் கான்கார்டியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குதல்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, 24.02.2026 மற்றும் 25.02.2026 ஆகிய இரண்டு நாட்கள் கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குள் ட்ரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தடையை மீறி ட்ரோன்களைப் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.10 லட்சம் வாக்காளர்கள்: இறுதி பட்டியல் வெளியீடு
திங்கள் 23, பிப்ரவரி 2026 3:31:34 PM (IST)

பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரிக்கு தினசரி இரயில்கள் கிடைக்குமா? – பயணிகள் எதிர்பார்ப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:10:46 PM (IST)

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)

