» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சாக்லேட் தருவதாக கூறி சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ ட்டத்தில் வாலிபர் கைது!
வியாழன் 5, பிப்ரவரி 2026 8:28:55 AM (IST)
நெல்லையில் சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
நெல்லை அருகே உள்ள கீழப்பாட்டம் பகுதியை சேர்ந்தவர் விக்ரம் (22). இவர் சம்பவத்தன்று அந்தப்பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார்.பின்னர் அவர்களுக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து விக்ரம் அந்த சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் கதறினர். ஆத்திரமடைந்த விக்ரம், இதுபற்றி வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று சிறுவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன சிறுவர்கள் இதுபற்றி பெற்றோரிடம் கூறாமல் மறைத்து வந்தனர். ஆனால் இந்த விவகாரம் குறித்து சமீபத்தில்தான் சிறுவர்கள் தங்களின் பெற்றோரிடம் கூறினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் தந்தை நெல்லை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி விசாரணை நடத்தினார். விசாரணையில், சிறுவர்களுக்கு விக்ரம் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று போலீசார் விக்ரம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)

மின் இணைப்பு கேட்டபெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அதிகாரி பணியிடை நீக்கம்!
சனி 31, ஜனவரி 2026 11:16:03 AM (IST)

