» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா தேர் பவனி : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
புதன் 3, டிசம்பர் 2025 10:18:13 AM (IST)

நாகர்கோவில் அருகே கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவில் தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தின் திருவிழா நவ.23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேள தாளங்கள் முழங்க கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அமைதி புறாக்கள் பறக்க விடப்பட்டன. கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் முதல் நாள் திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று டிசம்பர் 3 தேர் பவனி நடைபெற்றது. தேர்பவனியில் பக்தர்களின் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிகழ்சியில் குமரி மாவட்டம் மட்டுமல்ல நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சென்னை மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். தேர் பவனியை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காசி தமிழ் சங்கமம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:11:22 PM (IST)

கிறிஸ்துமஸ் புத்தாண்டு: தற்காலிக பட்டாசு கடைகள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 11:33:27 AM (IST)

மயக்க பிஸ்கட் கொடுத்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: பேருந்து ஓட்டுநர் கைது!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 10:24:12 AM (IST)

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி: வாலிபர் கைது!!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:51:56 PM (IST)

நிதி நிறுவனத்தில் போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சம் கையாடல்: பெண் மேலாளர் சிக்கினார்
திங்கள் 1, டிசம்பர் 2025 8:46:21 PM (IST)

பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமம் ஏலம் : டிச.10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 4:03:58 PM (IST)


.gif)