» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நிதி நிறுவனத்தில் போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சம் கையாடல்: பெண் மேலாளர் சிக்கினார்
திங்கள் 1, டிசம்பர் 2025 8:46:21 PM (IST)
தேங்காப்பட்டணத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சம் மோசடி செய்த பெண் மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இதில் காஞ்சிரவிளையை சேர்ந்த பிந்து (வயது 46) என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் மண்டல மேலாளரான அருமனையை சேர்ந்த ஜெகன் டார்வின் (35) என்பவர் அந்த நிதி நிறுவனத்தில் ஆய்வு செய்தார். அப்போது கிளை மேலாளர் பிந்து, நகையை அடகு வைத்த வாடிக்கையாளர்களுக்கு போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சத்து 8 ஆயிரத்து 938-ஐ கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மண்டல மேலாளர் ஜெகன் டார்வின் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் பிந்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிதிநிறுவனத்தில் போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சம் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருட வந்த இடத்தில் குறட்டை விட்ட திருடன்: கன்னியாகுமரியில் விசித்திர சம்பவம்!
சனி 7, மார்ச் 2026 4:30:54 PM (IST)

கன்னியாகுமரியில் ரூ.91.20 கோடி நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 11:10:09 AM (IST)

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)

நாகர்கோவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அந்தியோதயா ரயில் கட்டண விபரம்
வெள்ளி 6, மார்ச் 2026 10:14:29 AM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:01:34 AM (IST)

