» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நிதி நிறுவனத்தில் போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சம் கையாடல்: பெண் மேலாளர் சிக்கினார்
திங்கள் 1, டிசம்பர் 2025 8:46:21 PM (IST)
தேங்காப்பட்டணத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சம் மோசடி செய்த பெண் மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இதில் காஞ்சிரவிளையை சேர்ந்த பிந்து (வயது 46) என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் மண்டல மேலாளரான அருமனையை சேர்ந்த ஜெகன் டார்வின் (35) என்பவர் அந்த நிதி நிறுவனத்தில் ஆய்வு செய்தார். அப்போது கிளை மேலாளர் பிந்து, நகையை அடகு வைத்த வாடிக்கையாளர்களுக்கு போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சத்து 8 ஆயிரத்து 938-ஐ கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மண்டல மேலாளர் ஜெகன் டார்வின் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் பிந்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிதிநிறுவனத்தில் போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சம் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி: வாலிபர் கைது!!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:51:56 PM (IST)

பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமம் ஏலம் : டிச.10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 4:03:58 PM (IST)

திற்பரப்பு அருவியில் குளிக்க 7 நாள்களுக்குப் பிறகு அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
ஞாயிறு 30, நவம்பர் 2025 10:34:28 AM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் முழுஉடல் பரிசோதனை முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 29, நவம்பர் 2025 5:02:37 PM (IST)

குமரி பகவதி அம்மன் கோவில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1.65 லட்சம் வருவாய்!
வெள்ளி 28, நவம்பர் 2025 10:42:22 AM (IST)

மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்: கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
வியாழன் 27, நவம்பர் 2025 3:46:38 PM (IST)


.gif)