» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பைக் திருட்டில் ஈடுபட்ட நான்கு இளஞ்சிறார்கள் உட்பட 5பேர் கைது: 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
புதன் 26, நவம்பர் 2025 11:08:54 AM (IST)

குமரி மாவட்டத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 4 இளஞ்சிறார்கள் உட்பட 5பேரை போலீசார் கைது செய்தனர். 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில் தக்கலை, கன்னியாகுமரி பகுதிகளில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது . இப்புகார்கள் சம்பந்தமாக உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில் நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிவ சங்கரன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் அஜய் ராஜா ஆகியோர் தலைமையில் தனிப்படை விசாரணையில் இந்தத் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலி மாவட்டம் கோட்டையடி பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் மாரியப்பன்(22) மற்றும் நான்கு 18 வயதிற்கு உட்பட்ட இளஞ்சிரார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 5பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏழு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இருசக்கர வாகனங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று : 700 விசைப்படகுகள் கரைதிரும்பின
புதன் 26, நவம்பர் 2025 3:35:40 PM (IST)

குமரி மாவட்ட ஆட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 5:23:14 PM (IST)

தமிழ் வழியில் பயின்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு காமராஜர் விருது!
செவ்வாய் 25, நவம்பர் 2025 12:26:17 PM (IST)

நியாய விலை கடைகளுக்கு புதிய எந்திரங்கள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்!
திங்கள் 24, நவம்பர் 2025 5:01:54 PM (IST)

முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ஆன்மிகச் சுடர் விருது: பாலபிரஜாதிபதி அடிகளார் வழங்கினார்
திங்கள் 24, நவம்பர் 2025 3:25:54 PM (IST)

நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்திவைப்பு: விஜய் வசந்த் எம்.பி. தகவல்
சனி 22, நவம்பர் 2025 12:02:54 PM (IST)


.gif)