» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்ட ஆட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 5:23:14 PM (IST)
கன்னியாகுமரியில், எஸ்ஐஆர் பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆட்சியர் தரக்குறைவாக பேசுவதாக கூறி கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் S.I.R (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கூறி கிராம நிர்வாக அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாகவும் மேலும் ஒரு அதிகாரியின் கைபேசியை பிடுங்கி எறிந்து அநாகரீகமாக பேசியதாகவும் கூறி கிராம நிர்வாக அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நாங்கள் எஸ் ஐ ஆர் (S.I.R) பணிகளை வேகமாக செய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் தனது பெயரை முன்னிறுத்திக்கொள்ள தங்களை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும் அதிக பணிச்சுமை தங்களுக்கு வழங்கி வருவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில்- நியூ ஜல்பைகுரி அமித் பாரத் ரயில் அறிவிப்பு வழித்தடத்தில் சிறிய மாற்றம் தேவை!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:48:03 PM (IST)

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில்1057 தன்னார்வலர்கள் தேர்வு: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:52:17 PM (IST)

அனைவரும் சாலைவிதிகளை மதிக்க வேண்டும்: எஸ்பி ஸ்டாலின் வேண்டுகோள்
வெள்ளி 9, ஜனவரி 2026 3:25:46 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டம் துவக்கம்
வியாழன் 8, ஜனவரி 2026 12:54:42 PM (IST)

நாகர்கோவில் சந்திப்பில் ரயில் சேவை மாற்றம் : குமரியில் இருந்து ரயில்கள் இயக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 4:37:07 PM (IST)

