» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்ட ஆட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 5:23:14 PM (IST)
கன்னியாகுமரியில், எஸ்ஐஆர் பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆட்சியர் தரக்குறைவாக பேசுவதாக கூறி கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் S.I.R (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கூறி கிராம நிர்வாக அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாகவும் மேலும் ஒரு அதிகாரியின் கைபேசியை பிடுங்கி எறிந்து அநாகரீகமாக பேசியதாகவும் கூறி கிராம நிர்வாக அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நாங்கள் எஸ் ஐ ஆர் (S.I.R) பணிகளை வேகமாக செய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் தனது பெயரை முன்னிறுத்திக்கொள்ள தங்களை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும் அதிக பணிச்சுமை தங்களுக்கு வழங்கி வருவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருட வந்த இடத்தில் குறட்டை விட்ட திருடன்: கன்னியாகுமரியில் விசித்திர சம்பவம்!
சனி 7, மார்ச் 2026 4:30:54 PM (IST)

கன்னியாகுமரியில் ரூ.91.20 கோடி நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 11:10:09 AM (IST)

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)

நாகர்கோவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அந்தியோதயா ரயில் கட்டண விபரம்
வெள்ளி 6, மார்ச் 2026 10:14:29 AM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:01:34 AM (IST)

