» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தாம்பரம் - நாகர்கோவில் உள்ளிட்ட 5 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!
திங்கள் 27, அக்டோபர் 2025 4:59:11 PM (IST)
தாம்பரம் - நாகர்கோவில் உள்ளிட்ட 5 ரயிகளில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தாம்பரம் - செங்கோட்டை (வண்டி எண்: 20681/20682) செல்லும் சிலம்பு அதிவேக எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரையிலும், செங்கல்பட்டில் இருந்து நவம்பர் 2 முதல் ஏப்ரல் 30 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.
தாம்பரம் - நாகர்கோவில் (வண்டி எண்: 22657/22658) செல்லும் எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 2ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரையிலும், நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 3 முதல் ஏப்ரல் 30 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.
சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் (வண்டி எண்: 12695/12696) செல்லும் எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 3ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரையிலும், திருவனந்தபுரத்தில் இருந்து நவம்பர் 4 முதல் ஏப்ரல் 30 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.
சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா (வண்டி எண்: 22639/22640) செல்லும் எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1ம் தேதி முதல் ஏப்ரல் 27 வரையிலும், ஆலப்புழாவில் இருந்து நவம்பர் 2 முதல் ஏப்ரல் 28 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.
கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் (வண்டி எண்: 16618/16617) செல்லும் எக்ஸ்பிரல் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 4ம் தேதி முதல் ஏப்ரல் 28 வரையிலும், ராமேஸ்வரத்தில் இருந்து நவம்பர் 5 முதல் ஏப்ரல் 29 வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டும்.
கூடுதல் பெட்டிகளின் அமைப்பு: 1 - ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டி, 2 - ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டி, 3 - ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி, 1 - பொது வகுப்பு பெட்டி
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:12:56 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:53:00 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் நாளை ஹனுமான் ஜெயந்தி விழா
வியாழன் 18, டிசம்பர் 2025 3:42:39 PM (IST)

சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியில் எஸ்பி ஆய்வு : மேற்பார்வையாளர் கைது!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:06:04 PM (IST)

நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 10:42:55 AM (IST)


.gif)