» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நான்கு வழிச்சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் கைது: 6 மோட்டார் பைக் பறிமுதல்
திங்கள் 27, அக்டோபர் 2025 8:45:36 AM (IST)

வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 6பேரை போலீசார் கைது செய்து, 6 மோட்டார் பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் இளைஞர்கள் சிலர் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து முக்கிய சாலை வழியாக பைக் ரேசில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இவர்கள் ஆபத்தான முறையில் அதிவேகமாக சாலையில் செல்வதால், மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு விபத்து அபாயமும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேசில் ஈடுபடுபவர்களை போலீசார் அவ்வப்போது பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை வள்ளியூரில் இருந்து நான்கு வழிச்சாலை வழியாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் 6 மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக் ரேசில் ஈடுபட்டு வந்த 6 பேரை மடக்கிப்பிடித்தனர்.
விசாரணையில், அந்த வாலிபர்கள் குமரி மாவட்டம் வெள்ளமடத்தை சேர்ந்த அஸ்வந்த், தக்கலையை சேர்ந்த ஜெகன், குமரியை சேர்ந்த வெஸ்லி, நாகர்கோவிலை சேர்ந்த சாமில் ஜான், நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியை சேர்ந்த அஜய் சபரி மற்றும் பென்ஷன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
நண்பர்களான இவர்கள் அனைவரும் விடுமுறை தினமான நேற்று பைக் ரேசில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் அதிரடியாக கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 6 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:12:56 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:53:00 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் நாளை ஹனுமான் ஜெயந்தி விழா
வியாழன் 18, டிசம்பர் 2025 3:42:39 PM (IST)

சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியில் எஸ்பி ஆய்வு : மேற்பார்வையாளர் கைது!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:06:04 PM (IST)

நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 10:42:55 AM (IST)


.gif)