» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் : காவல் துறை அழைப்பு!
புதன் 22, அக்டோபர் 2025 3:36:41 PM (IST)
இறச்சகுளத்தில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்று குமரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், இறச்சகுளத்தில் இயங்கி வந்த "JNF Trading" என்ற நிதி நிறுவனம், அதன் இயக்குநர்கள் மற்றும் மேலாளர்கள் மீது நாகர்கோவில் பொருளாதாரக் குற்றப்பிரிவு குற்ற எண்: 02/2025, U/s.406, 420, 120(B) IPC, Sec.5 of TNPID Act-1997 and Sec.21(3) and 23 of BUDS Act-2019-15.09.2025-4 செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. ஆகவே, மேற்படி நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த நபர்கள் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரடியாக வந்து புகார் மனு கொடுக்கும்படி நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், இது போன்று பணம் முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாகவும், நிலம் தருவதாகவும் மற்றும் பணம் இரட்டிப்பாக தருவதாகவும் கூறும் தனியார் நிதி நிறுவனங்களில் யாரும் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்றும், RBI அனுமதி பெற்ற தனியார் வங்கிகள் மற்றும் அரசு வங்கிகளில் முதலீடு செய்து பணத்தை பாதுகாத்து கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சொத்தவிளை கடற்கரையில் கடல் உள்வாங்கியது!
புதன் 28, ஜனவரி 2026 5:55:38 PM (IST)

மடிக்கணினிகளை 2 தினங்களில் பெற்றுக்கொள்ள வேண்டும்: ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தல்
புதன் 28, ஜனவரி 2026 5:41:21 PM (IST)

வெறிப்பிடித்த தெரு நாய் கடிதத்தில் 3 குழந்தைகள் உள்பட பலர் காயம் - மருத்துவமனையில் அனுமதி!
புதன் 28, ஜனவரி 2026 10:47:30 AM (IST)

இதுவரை 1,06,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு உங்க கனவ சொல்லுங்க அட்டை : ஆட்சியர்..!
செவ்வாய் 27, ஜனவரி 2026 5:08:31 PM (IST)

கன்னியாகுமரியில் 77-வது குடியரசு தினவிழா: ஆட்சியர் அழகுமீனா தேசியக்கொடி ஏற்றினார்!
திங்கள் 26, ஜனவரி 2026 12:43:43 PM (IST)

பெண் வெளியிட்ட வீடியோ எதிரொலி: சுசீந்திரம் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை!
ஞாயிறு 25, ஜனவரி 2026 1:50:08 PM (IST)

