» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்: மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 12:02:33 PM (IST)

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் சேதம் அடைந்துள்ள சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி டூவிபுரம் மெயின் ரோட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதற்காக மாநகராட்சி நிர்வாகத்தினர் சாலையை தோண்டி பைப் லைனை சரி செய்தனர். இதன் பின்னர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், அந்த பள்ளம் பெரிதாகி உள்ளது. இதனால் சாலையில் போக்குவரத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோக்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. இதன் அருகே தாலூகா அலுவலகம், தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரி உட்பட உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:32:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:25:13 AM (IST)

குடியிருப்பு பகுதிக்கு வந்த மலைப்பாம்பு : பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
வியாழன் 16, அக்டோபர் 2025 8:07:39 PM (IST)

புனித தேவசகாயம் திருத்தலத்தில் இன்று நன்றி திருப்பலி : ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு
புதன் 15, அக்டோபர் 2025 8:06:41 PM (IST)

நாகர்கோவிலில் 17ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
புதன் 15, அக்டோபர் 2025 4:32:26 PM (IST)

அன்புOct 17, 2025 - 12:25:23 PM | Posted IP 162.1*****