» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் சுதேசி கப்பல் தினம் : வ.உ.சி. சிலைக்கு இந்து முன்னணி மரியாதை!
வியாழன் 16, அக்டோபர் 2025 4:53:52 PM (IST)

தூத்துக்குடியில் சுதேசி கப்பல் இயக்கிய தினத்தை முன்னிட்டு இந்து முன்னணியினர் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆங்கிலேய ஏகாபத்தியத்திற்கு எதிராக வ.உ.சிதம்பரம் பிள்ளை 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். இந்து முன்னணியின் கிளை அமைப்பான இந்து வியாபாரிகள் நலச்சங்கம் ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி வணிகர் தினமாக கொண்டாடி வருகிறது.
இதையொட்டி இன்று தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் முன்பு அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு மாநில இந்து வியாபாரிகள் சங்கத் தலைவரும் இந்து முன்னணி மாநில துணைத் தலைவருமான வி.பி. ஜெயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், மாநகர மாவட்ட செயலாளர் சரவணகுமார், மேற்கு மண்டல துணைத் தலைவர் சுடலைமணி, கிழக்கு மண்டல செயலாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரி உட்பட உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:32:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:25:13 AM (IST)

குடியிருப்பு பகுதிக்கு வந்த மலைப்பாம்பு : பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
வியாழன் 16, அக்டோபர் 2025 8:07:39 PM (IST)

புனித தேவசகாயம் திருத்தலத்தில் இன்று நன்றி திருப்பலி : ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு
புதன் 15, அக்டோபர் 2025 8:06:41 PM (IST)

நாகர்கோவிலில் 17ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
புதன் 15, அக்டோபர் 2025 4:32:26 PM (IST)

வெங்கடேஷ்Oct 17, 2025 - 11:43:31 AM | Posted IP 172.7*****