» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கடல்போல் காட்சியளிக்கும் தருவை மைதானம் : விளையாட்டு பயிற்சிகள் ரத்து
வியாழன் 16, அக்டோபர் 2025 3:15:56 PM (IST)

தூத்துக்குடியில் பெய்த கன மழையால் மாவட்ட விளையாட்டு மைதானம் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. பின்னர், நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை மழை வெளுத்து வாங்கியது.
தூத்துக்குடியில் கன மழையால் மாவட்ட விளையாட்டு மைதானம் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. மேலும், கால்பந்து மைதானம், கைப்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விளையாட்டு பயிற்சிகள் எதுவும் நடைபெறவில்லை. மேலும், நடைபயிற்சிக்கு மக்களை அனுமதிக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகம் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
அன்புOct 16, 2025 - 05:37:01 PM | Posted IP 172.7*****
இந்த விளையாட்டு மைதானத்தை சுற்றி பெரிய வடிகால் இருக்கிறது ஆனால் அதன் மட்டம் இதைவிட உயர்வாக இருப்பதால் தண்ணீர் வெளியேற முடியாமல் இருக்கின்றது விளையாட்டு மைதானத்தை தான் உயர்த்த வேண்டும்
மேலும் தொடரும் செய்திகள்

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரி உட்பட உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:32:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:25:13 AM (IST)

குடியிருப்பு பகுதிக்கு வந்த மலைப்பாம்பு : பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
வியாழன் 16, அக்டோபர் 2025 8:07:39 PM (IST)

புனித தேவசகாயம் திருத்தலத்தில் இன்று நன்றி திருப்பலி : ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு
புதன் 15, அக்டோபர் 2025 8:06:41 PM (IST)

நாகர்கோவிலில் 17ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
புதன் 15, அக்டோபர் 2025 4:32:26 PM (IST)

ஆமாOct 17, 2025 - 02:01:11 PM | Posted IP 104.2*****