» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
லாரியின் கீழே படுத்து தூங்கிய வாலிபர் பரிதாப சாவு - தூத்துக்குடியில் சோகம்!
வியாழன் 16, அக்டோபர் 2025 11:02:34 AM (IST)
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் லாரியின் கீழே படுத்து தூங்கிய வாலிபர், லாரியை டிரைவர் எடுத்ததால் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் கீழ அழகாபுரியைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் முத்து சுகுமார் (24) கொத்தனார். மேலும், மீன்பிடி துறைமுகத்தில் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவர் மீன்பிடி துறைமுகத்தில் ஒரு லாரியின் கீழே படுத்து உறங்கினாராம். இதையறியமால் நள்ளிரவு 12 மணி அளவில் அந்த லாரியை டிரைவர் எடுத்துள்ளார்.
அப்போது லாரியின் அடியில் தூங்கி கொண்டிருந்த முத்து சுகுமார் மேல் லாரி டயர் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று கிரேன் மூலம் லாரியை தூக்கி முத்து சுகுமாரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் குளத்தூர் அருகே உள்ள கச்சிலாபுரம் ராமர் மகன் ராஜசேகர் வயது 45 என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் இறந்த முத்து சுமாருக்கு திருமணம் ஆகவில்லை. தாயார் முத்தம்மாள் மற்றும் 2 சகோதரிகள் உள்ளனர். அவரது மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
KingOct 18, 2025 - 01:01:01 AM | Posted IP 104.2*****
என்னமா பொய் சொல்ரிங்கடா இது நடந்தது DBGT உள்ள நியூ habour DBGT கன்டெய்னர் யார்ட் உள்ள நாங்க அங்கதா இருந்தோம்
மேலும் தொடரும் செய்திகள்

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரி உட்பட உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:32:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:25:13 AM (IST)

குடியிருப்பு பகுதிக்கு வந்த மலைப்பாம்பு : பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
வியாழன் 16, அக்டோபர் 2025 8:07:39 PM (IST)

புனித தேவசகாயம் திருத்தலத்தில் இன்று நன்றி திருப்பலி : ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு
புதன் 15, அக்டோபர் 2025 8:06:41 PM (IST)

நாகர்கோவிலில் 17ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
புதன் 15, அக்டோபர் 2025 4:32:26 PM (IST)

KingOct 18, 2025 - 01:05:53 AM | Posted IP 104.2*****