» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு : போலீஸ் விசாரணை
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 4:38:51 PM (IST)
நித்திரவிளை அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
 கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள பொன்னுரிக்கி வீட்டை சேர்ந்தவர் தங்கப்பன். இவருடைய மனைவி லீலாபாய் (77).இவர் நேற்று முன்தினம் மாலையில் களியக்காவிளை செல்வதற்காக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.
 பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தாக கூறப்படுகிறது. பின்னர், களியக்காவிளை வந்ததும் பஸ்சில் இருந்து லீலாபாய் இறங்கினார். அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
 பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம ஆசாமி நகை அபேஸ் செய்தது தெரியவந்தது. பின்னர், இதுபற்றி லீலாபாய் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திங்கள் 3, நவம்பர் 2025 8:19:38 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் : மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை!
சனி 1, நவம்பர் 2025 12:48:19 PM (IST)

ஐயப்ப பக்தர்கள் சீசன் நவ. 17ல் தொடக்கம்: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சனி 1, நவம்பர் 2025 12:09:30 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)

பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)


.gif)