» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வீட்டில் சமையலறையில் 5 குட்டிகளுடன் பதுங்கி இருந்த மரநாய் மீட்பு!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:44:22 AM (IST)
மார்த்தாண்டம் அருகே வீட்டில் சமையலறை பகுதியில் 5 குட்டிகளுடன் பதுங்கியிருந்த மரநாயை தீயணைப்புப் படை வீரர்கள் மீட்டனர்.
 குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே புதுக்கடை, தவிட்டவிளையைச் சேர்ந்தவர் ஆன்டணி அருள்தாஸ். இவரது வீட்டின் பின்பகுதியில் சமையலறையையொட்டி விறகுகள் வைக்கப்பட்டிருந்ததாம். அப்பகுதியில் மரநாய் 5 குட்டிகளுடன் இருந்ததை கண்டுள்ளார். 
 இதையடுத்து, அவர் குழித்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிலைய அலுவலர் சந்திரன் தலைமையிலான தீயணைப்புப் படையினர் வந்து, மரநாய் மற்றும் அதன் 5 குட்டிகளை பிடித்து கூண்டுக்குள் அடைத்தனர். தொடர்ந்து அவற்றை களியல் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திங்கள் 3, நவம்பர் 2025 8:19:38 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் : மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை!
சனி 1, நவம்பர் 2025 12:48:19 PM (IST)

ஐயப்ப பக்தர்கள் சீசன் நவ. 17ல் தொடக்கம்: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சனி 1, நவம்பர் 2025 12:09:30 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)

பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)


.gif)