» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்: விஜய் வசந்த் எம்.பி.க்கு பயணிகள் நன்றி

செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 11:41:08 AM (IST)

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவுக்காக திருவனந்தபுரத்திலிருந்து சிறப்பு ரயில் இயக்கம் குறித்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, விஜய் வசந்த் எம்.பி.க்கு ரயில் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை விழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவுக்கு, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். இந்தத் திருவிழாவை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

ஆனால், நிகழாண்டு இந்த அறிவிப்பு தாமதம் அடைந்ததை ஒட்டி, ரயில் பயணிகள் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்திடம் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட விஜய் வசந்த் எம்.பி. சிறப்பு ரயிலை இயக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், ரயில்வே நிர்வாகம், நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரயில் எண் 06115, 06116 திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்காக, வேளாங்கண்ணி ஆலயத்துக்குச் செல்லும் பொதுமக்கள், ரயில் பயணிகள் விஜய் வசந்த் எம்.பி.க்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory