» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை பெற அழைப்பு

வியாழன் 7, ஆகஸ்ட் 2025 4:13:14 PM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அணுகி பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைநிலைப் பொதுத்தேர்வு (SSLC) எழுதிய தனித்தேர்வர்களின் கவனத்திற்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

செப்டம்பர் 2021 இடைநிலை துணைத்தேர்வு மற்றும் மே 2022 பொதுத்தேர்வு /ஆகஸ்ட் 2022 இடைநிலை துணைத்தேர்வு வரையிலான அனைத்து பருவங்களுக்குரிய தனித்தேர்வர்களால் கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இந்த செய்திக்குறிப்பு வெளியிடப்படும் நாளில் இருந்து 90 நாட்களுக்குள் தேர்வு எழுதிய நுழைவுச்சீட்டுடன் நாகர்கோவில் முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அணுகி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். தவறினால் மேற்படி தேர்விற்குரிய மதிப்பெண் சான்றிதழ்களை விதிமுறைகளின்படி அழிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory