» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் ஆசிரியர்கள் சாலை மறியல்: பெண்கள் உட்பட100க்கும் மேற்பட்டோர் கைது
வெள்ளி 18, ஜூலை 2025 4:04:20 PM (IST)

நாகர்கோவிலில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
மறியல் போராட்டத்திற்கு டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், சுமஹாசன் தலைமை வகித்தனர். போராட்டத்தினை டிட்டோ ஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் தியாகராஜன் தொடங்கி வைத்தார். மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் : ஆட்சியர் திறந்து வைத்தார்!
வெள்ளி 18, ஜூலை 2025 5:27:44 PM (IST)

பிரதமர் வருகை: சோழமண்டலத்தில் இருந்து ரயில் வருமா? எதிர்பார்ப்பில் குமரி பயணிகள்!
வியாழன் 17, ஜூலை 2025 5:16:18 PM (IST)

பொருட்காட்சியில் நைட்டி அணிந்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்: 7பேர் மீது வழக்குப் பதிவு
வியாழன் 17, ஜூலை 2025 5:02:12 PM (IST)

ஜூலை 25ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்!
வியாழன் 17, ஜூலை 2025 3:36:16 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவிப்பு
புதன் 16, ஜூலை 2025 11:24:24 AM (IST)

எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 5 பேர் கைது:பரபரப்பு வாக்குமூலம்
புதன் 16, ஜூலை 2025 10:50:48 AM (IST)
