» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 5 பேர் கைது:பரபரப்பு வாக்குமூலம்
புதன் 16, ஜூலை 2025 10:50:48 AM (IST)
கொட்டாரம் அருகே எலக்ட்ரீசியனை கொலை செய்த வழக்கில் சிறுவன் உட்பட 5பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த பொட்டல்குளம் அருகே உள்ள குருசடி குளம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஐயப்பன் (33) என்பவர் கடந்த 11 ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பொட்டல்குளம் பாலகிருஷ்ணன் நகரை சேர்ந்த ஆதிஷ்ரா (22), சக்தி(19), அஜய்(21), கொட்டாரத்தை சேர்ந்த ஆறுமுகம்(19) மற்றும் பரமாத்மா லிங்க புரத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் உட்பட 5பேர் அவரை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ரஸ்தக்காடு பகுதி புதரில் மறைந்திருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரித்ததில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் வைத்து ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் காரணமாக அய்யப்பனை 5பேரும் சேர்ந்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவிப்பு
புதன் 16, ஜூலை 2025 11:24:24 AM (IST)

கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் 123–வது பிறந்தநாள் விழா: அமைச்சர் மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 12:46:03 PM (IST)

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
செவ்வாய் 15, ஜூலை 2025 10:33:29 AM (IST)

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
செவ்வாய் 15, ஜூலை 2025 10:25:16 AM (IST)

ரேஷன் கடையில் ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
திங்கள் 14, ஜூலை 2025 12:02:27 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)
