» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 5 பேர் கைது:பரபரப்பு வாக்குமூலம்
புதன் 16, ஜூலை 2025 10:50:48 AM (IST)
கொட்டாரம் அருகே எலக்ட்ரீசியனை கொலை செய்த வழக்கில் சிறுவன் உட்பட 5பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த பொட்டல்குளம் அருகே உள்ள குருசடி குளம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஐயப்பன் (33) என்பவர் கடந்த 11 ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பொட்டல்குளம் பாலகிருஷ்ணன் நகரை சேர்ந்த ஆதிஷ்ரா (22), சக்தி(19), அஜய்(21), கொட்டாரத்தை சேர்ந்த ஆறுமுகம்(19) மற்றும் பரமாத்மா லிங்க புரத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் உட்பட 5பேர் அவரை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ரஸ்தக்காடு பகுதி புதரில் மறைந்திருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரித்ததில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் வைத்து ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் காரணமாக அய்யப்பனை 5பேரும் சேர்ந்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)
