» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருமணம் செய்வதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
செவ்வாய் 15, ஜூலை 2025 10:33:29 AM (IST)
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூர் சமத்துவபுரம் கங்கை தெருவை சேர்ந்தவர் மகேஷ் என்ற மகேஷ்வரன் (20), தொழிலாளி. இவருக்கும், சுசீந்திரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 13-1-2020 அன்று சிறுமியை, மகேஷ் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்துக்கு கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து சிறுமியை பலாத்காரம் செய்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை நீதிபதி சுந்தரையா விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், அப்போது குற்றம் சாட்டப்பட்ட மகேசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் 123–வது பிறந்தநாள் விழா: அமைச்சர் மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 12:46:03 PM (IST)

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
செவ்வாய் 15, ஜூலை 2025 10:25:16 AM (IST)

ரேஷன் கடையில் ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
திங்கள் 14, ஜூலை 2025 12:02:27 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)
