» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஜூன் 28ல் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு தேர்வு!
புதன் 25, ஜூன் 2025 11:49:20 AM (IST)
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 28ஆம் தேதி மாபெரும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TN Skills), தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜூன் மாதம் 28 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒழுங்குச் செய்யப் பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் சென்னையைச் சார்ந்த 3 நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட உள்ளனர். 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் அந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.
இந்த முகாமின் முன்பதிவு இணையவாயிலாக https://bit.ly/NCRJ2025 என்ற இணையத்தளத்தில் பதிவுசெய்து இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு
செவ்வாய் 24, ஜூன் 2025 5:28:10 PM (IST)

திருநங்கைகள் கல்வி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அரசே ஏற்கிறது: ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 24, ஜூன் 2025 3:57:09 PM (IST)

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு : மாணவ, மாணவியருக்கு அறிவுரை!!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:10:16 PM (IST)

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:04:22 PM (IST)

வழக்கில் தேடப்பட்டவர் குளத்தில் குதித்தார்: படகில் சென்று கைது செய்த போலீசார்!!
செவ்வாய் 24, ஜூன் 2025 11:56:09 AM (IST)

கொசு மருந்து தெளிப்போம்; மலேரியாவை ஒழிப்போம் : சுகாதாரத்துறை வேண்டுகோள்
திங்கள் 23, ஜூன் 2025 5:15:09 PM (IST)
