» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை!
திங்கள் 23, ஜூன் 2025 11:25:36 AM (IST)
இரணியல் அருகே ஓடும் பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் 2½ பவுன் தங்கச் செயினை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம் இரணியல் அருகே நெய்யூர் மாங்குழி பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவருடைய மனைவி மேரி ஏஞ்சல் (70). இவர் சம்பவத்தன்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு மருந்து வாங்க சென்றார். பின்னர் நாகர்கோவிலில் இருந்து திருநைனார்குறிச்சி வழியாக திங்கள்சந்தைக்கு செல்லும் பஸ்சில் ஏறி ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அந்த பஸ் மூங்கில்விளை பகுதியில் சென்றபோது, மேரி ஏஞ்சல் தனது கழுத்தில் கிடந்த 2½ பவுன் செயின் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பஸ்சை நிறுத்தும்படி கண்டக்டரிடம் கூறினார். இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதைதொடர்ந்து பஸ் முழுவதும் மேரி ஏஞ்சல் தேடிப்பார்த்தார். ஆனாலும், நகை கிடைக்கவில்லை.
பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம ஆசாமி மேரி ஏஞ்சலிடம் நகை அபேஸ் செய்துவட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மேரி ஏஞ்சல் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜூன் 28ல் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு தேர்வு!
புதன் 25, ஜூன் 2025 11:49:20 AM (IST)

பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு
செவ்வாய் 24, ஜூன் 2025 5:28:10 PM (IST)

திருநங்கைகள் கல்வி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அரசே ஏற்கிறது: ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 24, ஜூன் 2025 3:57:09 PM (IST)

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு : மாணவ, மாணவியருக்கு அறிவுரை!!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:10:16 PM (IST)

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:04:22 PM (IST)

வழக்கில் தேடப்பட்டவர் குளத்தில் குதித்தார்: படகில் சென்று கைது செய்த போலீசார்!!
செவ்வாய் 24, ஜூன் 2025 11:56:09 AM (IST)
