» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேருந்தில் பயணகளிடம் திருடிய 2 பெண்கள் உட்பட 3பேர் கைது: 27 பவுன் மீட்பு!

திங்கள் 16, ஜூன் 2025 12:12:33 PM (IST)

குமரி மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் வயதான பெண்களை குறி வைத்து திருடிய 2 பெண்கள் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினின் உத்தரவின்பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் தலைமையிலான போலீசார் கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து பல வருடமாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டிருந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேலகாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த விஜயா, மஞ்சு, அரவிந்த் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இவர்கள் பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் வயதான பெண்களை குறி வைத்து பர்ஸ், செயின் ஆகியவைகளை திருடி வந்தது தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து 27 சவரன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் போக்சோ குறித்து விழிப்புணர்வு செய்ய தனி காவலர்களை நியமித்தது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory