» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஜூன் 20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, ஜூன் 2025 12:39:29 PM (IST)
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜுன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து மே 2025 மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நேரில் பெறப்படும்.
கோரிக்கை மனுக்கள் பதிவு செய்யும் வசதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும். மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கேட்டுக்கொள்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாத்தூர் தொட்டிப்பாலம் மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்!
சனி 14, ஜூன் 2025 9:26:14 PM (IST)

போலீசார் வாகனத்தை பறித்ததால் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சனி 14, ஜூன் 2025 8:27:24 PM (IST)

பொதுமக்கள் தன்னார்வமாக இரத்த தானம் செய்திட முன்வர வேண்டும்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா
சனி 14, ஜூன் 2025 3:13:52 PM (IST)

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கும் பணி: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
வெள்ளி 13, ஜூன் 2025 5:20:07 PM (IST)

தோவாளை கால்வாய் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
வியாழன் 12, ஜூன் 2025 5:46:04 PM (IST)

புதிய ரயில்கள் இயக்கினால் மட்டுமே பயணிகள் நெருக்கடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!
வியாழன் 12, ஜூன் 2025 5:41:27 PM (IST)
