» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசு மருத்துவமனையில் கூடுதலாக 6 டயாலிசிஸ் எந்திரங்கள் : ஆட்சியர் துவக்கி வைத்தார்
வியாழன் 12, ஜூன் 2025 11:20:05 AM (IST)

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக ஆறு புதிய சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவ துறையின் சார்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துவக்கி வைத்து தெரிவிக்கையில் "ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறுநீரகப் பிரிவில் சுமார் பதினெட்டு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் (Dialysis Machine) செயல்பாட்டில் உள்ளது.
இந்த இயந்திரங்களின் வாயிலாக ஒரு மாதத்திற்கு சுமார் ஆயிரத்து அறுநூறு சிறுநீரக சுத்திகரிப்புகள் தினமும் சுமார் அறுபது சிறுநீரக சுத்திகரிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சிறுநீரக சுத்திகரிப்பு தற்காலிக சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கும், நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கும் அதாவது Acute Renal Failure, Chronic Renal Failure உள்ள Patients க்கும் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தற்காலிக சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு சில Dialysis Sessions மட்டுமே தேவைப்படும். ஒரு வாரம் அல்லது இரு வாரம் Dialysis செய்த பிறகு அவர்களது சிறுநீரகம் மீண்டும் வேலை செய்ய ஆரம்பிக்கும் பொழுது தொடர்ந்து Dialysis தேவைப்படுவதில்லை. ஆனால் நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு வாரம் இருமுறை தொடர்ந்து Dialysis செய்ய தேவைப்படுகிறது.
தற்பொழுது பதினெட்டு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் கள் மூலம் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகமான நோயாளிகள் இருப்பதால் இன்னும் அதிகமாக சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் தேவை இருக்கிறது. இன்று நாகர்கோவில், Rotary Club மூலமாக ஆறு புதிய சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை Dialysis பிரிவில் புதியதாக நன்கொடை கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம், இன்னும் பல புதிய நோயாளிகளுக்கு Dialysis கொடுக்க இந்த சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இராமலட்சுமி, மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் கிங்ஸ்லி, உறைவிட மருத்துவர் விஜயலக்ஷ்மி, உதவி உறைவிட மருத்துவர் ரெனிமோள் மற்றும் சிறுநீரகப் பிரிவு மருத்துவர் அருண் வர்கீஸ் ஆகியோர் பங்கேற்றனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜூன் 28ல் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு தேர்வு!
புதன் 25, ஜூன் 2025 11:49:20 AM (IST)

பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு
செவ்வாய் 24, ஜூன் 2025 5:28:10 PM (IST)

திருநங்கைகள் கல்வி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அரசே ஏற்கிறது: ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 24, ஜூன் 2025 3:57:09 PM (IST)

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு : மாணவ, மாணவியருக்கு அறிவுரை!!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:10:16 PM (IST)

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:04:22 PM (IST)

வழக்கில் தேடப்பட்டவர் குளத்தில் குதித்தார்: படகில் சென்று கைது செய்த போலீசார்!!
செவ்வாய் 24, ஜூன் 2025 11:56:09 AM (IST)
