» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி: 2பேர் கைது!
செவ்வாய் 10, ஜூன் 2025 11:51:21 AM (IST)
சுசீந்திரம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் மேல தெருவை சேர்ந்த பெயிண்டர் அய்யப்பன் (33). இவரது நண்பர் டேனியல். சம்பவத்தன்று இருவரும் பைக்கில் சுசீந்திரம் அருகே கற்காடு ரயில்வே கிராசிங் அருகே சென்ற கொண்டிருந்தனர். அப்போது சுசீந்திரம் கற்காடு பகுதியை சேர்ந்த பிரசாந்த் (26), கோட்டார் சபையார்குளத்தை சேர்ந்த அர்ஜுன் (23) ஆகிய இருவரும் சேர்ந்து அய்யப்பனை வழிமறித்தனர்.
பின்னர் தகாத வார்த்தைகள் பேசி தாக்கியும், கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.1000-த்தை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அய்யப்பன் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரசாந்த், அர்ஜுன் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)
