» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமாரபுரத்தில் காவல்துறை சார்பில் புதிய சோதனை சாவடி : எஸ்பி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

திங்கள் 9, ஜூன் 2025 5:37:39 PM (IST)



குமாரபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட சோதனை சாவடியை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரபுரம் பகுதியில் காவல்துறை சார்பில் தற்காலிக சோதனை சாவடி நிறுவப்பட்டிருந்தது. அச்சோதனை சாவடியை தரம் உயர்த்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் தரம் உயர்த்தப்பட்ட காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டது. அதில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு அதனை உள்ளிருந்து கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிதாக கட்டப்பட்ட காவல் சோதனை சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் லலித்குமார், ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் பச்சமால் உட்பட பலர் கலநது கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory