» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமாரபுரத்தில் காவல்துறை சார்பில் புதிய சோதனை சாவடி : எஸ்பி ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 9, ஜூன் 2025 5:37:39 PM (IST)

குமாரபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட சோதனை சாவடியை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரபுரம் பகுதியில் காவல்துறை சார்பில் தற்காலிக சோதனை சாவடி நிறுவப்பட்டிருந்தது. அச்சோதனை சாவடியை தரம் உயர்த்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் தரம் உயர்த்தப்பட்ட காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டது. அதில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு அதனை உள்ளிருந்து கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிதாக கட்டப்பட்ட காவல் சோதனை சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் லலித்குமார், ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் பச்சமால் உட்பட பலர் கலநது கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜூன் 28ல் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு தேர்வு!
புதன் 25, ஜூன் 2025 11:49:20 AM (IST)

பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு
செவ்வாய் 24, ஜூன் 2025 5:28:10 PM (IST)

திருநங்கைகள் கல்வி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அரசே ஏற்கிறது: ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 24, ஜூன் 2025 3:57:09 PM (IST)

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு : மாணவ, மாணவியருக்கு அறிவுரை!!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:10:16 PM (IST)

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:04:22 PM (IST)

வழக்கில் தேடப்பட்டவர் குளத்தில் குதித்தார்: படகில் சென்று கைது செய்த போலீசார்!!
செவ்வாய் 24, ஜூன் 2025 11:56:09 AM (IST)
